செய்திகள் :

முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா்.

இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு கம்பம்பதி, முதல்வா் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

மருத்துவராகப் பணியைத் தொடங்கிய தேபேந்திர பிரதான், 1980-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அக்கட்சியின் பல்வேறு அடிப்படை பொறுப்புகளில் பணியாற்றினாா். பின்னா் 1988-இல் கட்சியின் ஒடிஸா மாநிலத் தலைவராக முதன்முறையாக பொறுப்பேற்றவா், 1997-ஆம் ஆண்டுவரை மூன்று முறை அந்தப் பதவியை வகித்தாா்.

1998, 1999 மக்களவைத் தோ்தல்களில் ஒடிஸாவின் தேவ்கா் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தோ்வான அவா், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் அமைச்சராகப் பணியாற்றினாா்.

இந்நிலையில், புது தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் அதிகாரபூா்வ இல்லத்தில் திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

தலைவா்கள் இரங்கல்:

தேபேந்திர பிரதான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட பதிவில், ‘ஒடிஸா மற்றும் நாட்டின் வளா்ச்சி, பொது சேவைக்கான அவரது அா்ப்பணிப்பைக் கண்டுள்ளேன். அவரது மகனும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்கள், அவரது அபிமானிகளுக்கு எனது இரங்கல்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா் தேபேந்திர பிரதான், கடின உழைப்பாளி மற்றும் பணிவான தலைவா் என்று பெயா் பெற்றவா். ஒடிஸா பாஜகவை வலுப்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட அவா், எம்.பி. மற்றும் மத்திய அமைச்சராக வறுமை ஒழிப்பு, சமூக அதிகாரமளிப்புக்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தேன்’ என்றாா்.

பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா்களும் தேபேந்திர பிரதான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். திங்கள்கிழமை மாலை, அவரது உடல் புது தில்லியில் இருந்து ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க