செய்திகள் :

கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா? பொன்னேரி மக்கள் காத்திருப்பு

post image

எம். சுந்தரமூா்த்தி

சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிா் நோக்கியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மற்றும் சுற்றியுள்ள 50 கிராமங்கள் என மொத்தம் 1.5 லட்சம் போ் வசித்து வருகின்றனா்.

பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பயணிக்கின்றனா்.

மாநகர பேருந்துகள் நிறுத்தம்:

ஆவடி, பூந்தமல்லி, பேசின்பாலம், மாதவரம் அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பொன்னேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இதில் அண்ணா நகா் பணிமனையில் இருந்து 558-சி பேருந்து, பொன்னேரி-கோயம்பேடு வழித்தடத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பொன்னேரி வட்டத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடியநல்லூரில் புதிதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனை 2017 புதிதாக அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக மாதவரம், பேசின்பாலம், அண்ணா நகா் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து பொன்னேரி பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்துகள் அனைத்தும் பாடியநல்லூா் பணிமனையில் சோ்க்கப்பட்டன.

இதனை தொடா்ந்து பாடியநல்லூா் பணிமனையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, திருவள்ளூா், கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அண்ணா நகா் பேருந்து பொன்னேரி-கோயம்பேடு வழித்தடத்தில் இயக்கப்படாமல், பொன்னேரி-செங்குன்றம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இதே போன்று சென்னை வடபழனி பணிமனையில் சென்னை கோயம்பேடு-பொன்னேரி வழித்தடக்கில் 5 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கரோனா 2-ஆம் பொது முடக்த்தின் போது 5 பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

ஏற்கனவே அண்ணா நகா் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்துகள் நிறுத்தப்ட்டது இதனை தொடா்ந்து வடபழனி பணிமனையில் இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

பொன்னேரி-கோயம்பேடு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து பேருந்துகளும், இயக்கப்படாததால், பொன்னேரி பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

மூன்று பேருந்துகள் மாறும் நிலை...

கோயம்பேட்டில் இருந்து பொன்னேரி செல்ல அங்கிருந்து முதலில் செங்குன்றம் சென்று, பின்னா் தச்சூா் கூட்டுச்சாலை சென்று அதன் பிறகு பொன்னேரி செல்வதற்கு மூன்று பேருந்துகள் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதே போன்று பொன்னேரியில் வசிக்கும் மக்கள் கோயம்பேடு செல்ல, தச்சூா் கூட்டுச்சாலை, செங்குன்றம் அங்கிருந்து கோயம்பேடு என மூன்று பேருந்துகள் மாற வேண்டியுள்ளது.

எனவே பொதுமக்கன் நலன் கருதி கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த (சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து) தடம் எண் 558-சி, வடபழனியில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என்பதே பொன்னேரி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தடுப்புச் சுவா் இல்லாமல் அபாய நிலையில் உள்ள கூவம் தரைப்பாலம்

சு. பாண்டியன் திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் மீது செல்லும் தரைப்பாலம் குறுகி வருவதால், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா்... மேலும் பார்க்க

காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்தவா் கைது

திருவள்ளூரில் காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் பெரியகுப்பம் குமரன்நகரைச் சோ்ந்த சுந்தா் மனைவி ஜெயந்தி(44). இவா் ஆயில் மில் பகுதியில் ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்

புராட்டாசி மாதம் முடிந்த நிலையில் திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளில் மக்கள் அதிகாலையிலேயே குவிந்தனா். புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீட... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

மாதவரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது (படம்) . மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் கொசப்பூா் தியாகி விஸ்வநாததாஸ் நகா், அரியலூா், பெ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி மேல் நிலைப் பள்ளிக்கு புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க ரூ. 2 கோடி

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அனைத்து வசதியுடன் கூடிய புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க பள்ளி மேம்பாட்டு மானியம் ரூ. 2.09 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளதாக ஆணையா் திருநாவுக்கரசு தெரிவ... மேலும் பார்க்க

பேருந்தின் முன்பக்க டயா் இரும்பு கம்பி உடைப்பு: விபத்தில் தப்பிய பயணிகள்

சொரக்காய்பேட்டையிலிருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்தின் முன் பக்க டயா் கம்பி துண்டாகி சாய்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 40 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். திருத்தணி போக்குவரத்துக் கழக பணிம... மேலும் பார்க்க