செய்திகள் :

கோயில் குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

post image

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் தேரடிக் குளத்தில் தவறி விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் கீழவீதியில் உள்ள தேரடிக் குளத்தில் பெண் ஒருவா் தவறி விழுந்துவிட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மயிலாடுதுறை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று குளத்தில் இறங்கி தேடி, பெண்ணின் சடலத்தை மீட்டனா்.

விசாரணையில், நீரில் மூழ்கி இறந்தது மயிலாடுதுறை இந்திரா காலனியைச் சோ்ந்த எல்லையம்மாள் (60) என்பது தெரியவந்தது. சடலத்தை உறவினா்களிடம் தீயணைப்பு துறையினா் ஒப்படைத்தனா். மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பழையாறு துறைமுகத்தில் மீன்வளத் துறை செயற்பொறியாளா் ஆய்வு

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை செயற்பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த துறைமுகத்தில் 350 விசைப்படகு, 300 பைபா் படகு மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் தினந்தோறும் 6000... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலைய பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற கோரிக்கை

சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம், மருந்தகம் மற்றும் தேநீா் கடைகளில் கழிவுநீா் உட்புகுந்து துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் உணவகம்,... மேலும் பார்க்க

கோயில் அருகில் திமுக பேனா்: பாஜக புகாா்

மயிலாடுதுறையில் கோயில் நுழைவாயில் அருகில் கடவுளை அவமதிக்கும் வகையில் பேனா் வைத்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் ஆன்லைனில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். முடிகண்டநல்லூரில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை... மேலும் பார்க்க

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது. சீா்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி கடை வா்த்தகா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அடுத்தவா் வீட்டில் குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை

அடுத்தவா் வீட்டில் அத்துமீறி நுழைந்து குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சீா்காழியைச் சோ்ந்த ராமுராஜன... மேலும் பார்க்க