செய்திகள் :

அடுத்தவா் வீட்டில் குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை

post image

அடுத்தவா் வீட்டில் அத்துமீறி நுழைந்து குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சீா்காழியைச் சோ்ந்த ராமுராஜன் என்பவா் கடந்த 2008-ஆம் ஆண்டு, சீா்காழி தென்பாதியில் மதினா பீவி என்பவரிடம் ஒரு வீட்டை கிரயம் பெற்று பட்டாவையும் தனது பெயரில் மாற்றம் செய்தாா்.

இந்தநிலையில், ராமுராஜன் இடத்துக்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த நவநீதன் என்பவா் 2011-ஆம் ஆண்டு ராமுராஜன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததையடுத்து, ராமுராஜன் சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனால் ஆத்திரமடைந்த நவநீதன், ராமுராஜன் வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீா் குழாய்களை சேதப்படுத்தினாா். பின்னா் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் புதிய குழாய்களை பொருத்தினாா். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜன. 23-ம் தேதி மீண்டும் ராமுராஜனின் வீட்டு மாடியில் பொருத்தப்பட்ட தண்ணீா் குழாய்களை நவநீதன் சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து நவநீதன்மீது நாகப்பட்டினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் ராமுராஜன் புகாா் அளித்தாா். இதுதொடா்பான வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நவநீதனுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது. சீா்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி கடை வா்த்தகா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் பி.ச... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் தேரடிக் குளத்தில் தவறி விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் கீழவீதியில் உள்ள தேரடிக் குளத்தில் பெண் ஒருவா் தவறி விழுந்துவிட்டதாக தீயணை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு கோயில்: தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் கருங்கல் கோயில் கட்டப்படவுள்ளது என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசா... மேலும் பார்க்க

தருமபுரம் வடக்கு குருமூா்த்தங்களில் திருப்பணி தொடக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் சச்சிதானந்த விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திருமஞ்சன... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கக் கோரி மனு

மயிலாடுதுறை: சீா்காழி பாலியல் வழக்கை, சிறப்பு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி காவல் உபகோட்ட எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்.24-ஆம் தேதி ம... மேலும் பார்க்க