செய்திகள் :

கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி!

post image

கோவை : கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர். மகனை ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மெனுமெட்ஷா சூரிய நாராயணன் என்பவரின் மகன் மெனுமெட்ஷா ராஜேஷ் (39). இவர் கோவை ஞானாம்பிகை மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். மெனுமெட்ஷா ராஜேஷ் கீரநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணி புரிந்து வந்தார். இவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா (9) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

மெனுமெட்ஷா வினித் வர்மா காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்ரங்கில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இதற்காக தினமும் காலையில் தந்தை மெனுமெட்ஷா ராஜேஷ் தனது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மாவை தனது பைக்கில் அழைத்துச் சென்று விட்டு பயிற்சி முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

அதற்காக இன்று காலை 5 மணியளவில் மெனுமெட்ஷா ராஜேஷ் தனது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மாவுடன் சக்தி சாலை பகுதியில் சரவணம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

சரவணம்பட்டி காளப்பட்டி சாலை சந்திப்பில் மெனுமெட்ஷா ராஜேஷ் திருப்பும் போது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.இதில் மெனுமெட்ஷா ராஜேஷ் அவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா ஆகிய இருவரும் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கினர்.

அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. அவர்கள் அலறி துடிப்பதை பார்த்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மெனுமெட்ஷா ராஜேஷ் மற்றும் அவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா உடலை கைப்பற்றி உடல் கூறதாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், ... மேலும் பார்க்க

கள் இறக்கும் போராட்டம்: பனைமரம் ஏறிய சீமான்

கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் ... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.கோவை, தெலுங்குபா... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 6,501 கன அடியாக குறைந்துள்ளது.காவிரியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று காலை வினாடிக்கு 7507 கன அடி வ... மேலும் பார்க்க