செய்திகள் :

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் கைது - வெடிகுண்டுகள் பறிமுதல்

post image

சுக்மா : சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து வெடிகுண்டுகள், இதர வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பிஜபூா் மாவட்டத்தில் 18 நக்ஸல்களும், சுக்மா மாவட்டத்தில் 4 நக்ஸல்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கைதானவா்களிடம் இருந்து சக்திவாய்ந்த 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், 15 ஜெலட்டின் குச்சிகள், 2 மின்னணு டெட்டனேட்டா்கள், 8 சாதாரண டெட்டனேட்டா்கள், மின் வயா்கள், பேட்டரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ படைப் பிரிவினா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஒழிக்கும் இலக்குடன் பாதுகாப்புப் படையினா் செயல்பட்டு வருகின்றனா். பிஜபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையில் 11 பெண்கள் உள்பட 31 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க