செய்திகள் :

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிலஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, நேற்று (ஜூன் 9) மதியம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாலை 5.50 மணியளவில் அம்மாநில காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்ற வளாகத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், 2 வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியோடு நீதிமன்றம் முழுவதும் இரவு 10 மணி வரை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தச் சோதனைகளின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டதாக, அதிகாரிகள் இன்று (ஜூன் 10) தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், ஆட்சியர் அலுவகத்தில் பொருப்பட்டுள்ள ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு, மாலை 6.45 மணியளவில் வெடிக்கும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர் குழு இன்றும் நீதிமன்ற வளாகத்திலேயே முகாமிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மிரட்டல் விடுத்தவரைப் பிடிக்க காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பயங்கரவாதம் இருநாடுகளுக்கு மட்டுமான பிரச்னை அல்ல: அமைச்சர் ஜெய்சங்கர்!

என் வாழ்க்கையின் மோசமான நாள்: ஏர் இந்தியா தலைவர்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்... மேலும் பார்க்க

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! வெளியானது சிசிடிவி காட்சி!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேர... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும்,... மேலும் பார்க்க

ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் ’டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ர... மேலும் பார்க்க