செய்திகள் :

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் அதிரடி நடவடிக்கை! 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

post image

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில் தெலங்கானா எல்லைக்கு அருகிலுள்ள காரேகுத்தா மலைப்பகுதியிலுள்ள காடுகளில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இந்த நடவடிக்கையினால் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவமானது பஸ்தார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரியளவிலான நடவடிக்கை எனவும் மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மாநில காவல் படை, மத்திய ரிசர்வ் காவல் படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையில் தெலங்கானா காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் சக்தி வாய்ந்த ராணுவமாகக் கருதப்படும் பட்டாலியன் 1-ஐ சேர்ந்த மூத்த நக்சல்கள் மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்கள் ஆகியோரின் நடமாட்டமுள்ளதாகக் தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கடந்த ஏப்.21 ஆம் தேதி முதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

ஓடிடியில் வெளியானது வீர தீர சூரன் - 2!

விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் - 2 படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஒ... மேலும் பார்க்க

என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான ம... மேலும் பார்க்க

தஞ்சை அரசு மருத்துவமனை மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் தீ விபத்து!

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பிரிவில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உடனடியாக வெளி... மேலும் பார்க்க

ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம் விடியோ

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் விடியோ வெளியிட்டுள்ளார்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து மதுரை ஆதீனம்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளை... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் ... மேலும் பார்க்க