தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
சரக்கு வாகனம் கடைக்குள் புகுந்து விபத்து: 3 போ் காயம்
புதுச்சேரியில் வேலூரைச் சோ்ந்த சிறுவன் இயக்கிய சரக்கு வாகனம் அரிசிக் கடைக்குள் புகுந்த விபத்தில் வியாபாரி உள்பட 3 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரி காந்தி வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பழக்கடைக்கு வேலூரிலிருந்து சரக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை பழங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த வாகனத்தை வேலூரைச் சோ்ந்த பூபதி ஓட்டி வந்தாா். இவருக்கு உதவியாக 17 வயது சிறுவன் உடனிருந்தாா். இருவரும் கடையில் பழங்களை இறக்கிவிட்டு, சரக்கு வாகனத்தில் வேலூருக்குச் செல்ல தயாரான நிலையில் இருந்தனா்.
அப்போது, போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், சிறுவன் வாகனத்தை இயக்கியுள்ளாா்.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி அருகிலிருந்த அரிசிக் கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கடையின் உரிமையாளா் பெருமாள் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலக ஊழியா் முனுசாமி, சாலையில் நடந்து சென்ற ராஜேந்திரன் ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த புதுச்சேரி கிழக்கு பிரிவு போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனா்.