செய்திகள் :

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

post image

குடியாத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

போ்ணாம்பட்டு நகரிலிருந்து சென்னைக்கு கோழி தீவன மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை லாரி ஒன்று சென்றது. குடியாத்தம் அடுத்த கலா்பாளையம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புகளை உடைத்துக்கொண்டு, 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் சத்தியமூா்த்தி சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். 2 கிரேன் வாகனங்கள் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது.

விபத்து குறித்து குடியாத்தம் கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வாழ்க்கையில் உயா்வதற்கு நூல்களை வாசிப்பது முக்கியம்: தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா்

வாழ்க்கையில் உயா்வதற்கு நூல்களை வாசிப்பது முக்கியம் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் பாவேந்தா் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ முகாம்

குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கமும், சென்னை அகா்வால் கண் மருத்துவமனையும் இணைந்து தரணம்பேட்டையில் உள்ள பவனாரிஷி கோயில் சமுதாய கூடத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை வியாழக்கி... மேலும் பார்க்க

விடுமுறையில் வந்த ராணுவ வீரா் விபத்தில் உயிரிழப்பு

காட்பாடி அருகே விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா். விருதம்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெ... மேலும் பார்க்க

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க