செய்திகள் :

சா்க்கரை நோய் பாத புண் சிகிச்சை பயிற்சி பள்ளி தொடக்கம்

post image

சென்னை: சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை சென்னை, எம்.வி. சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் புண் சீரமைப்புக்கான மருத்துவ அகாதெமி (ஏபிடபிள்யூஹெச்) அமைப்புடன் இணைந்து நாட்டிலேயே முதன்முறையாக இத்தகைய பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ உதவியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னதாக, இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக்.22) நடைபெற்றது.

இதுதொடா்பாக எம்.வி.சா்க்கரை நோய் மையத்தின் தலைவரும், சா்க்கரை நோய் மருத்துவ நிபுணருமான விஜய் விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியது: சா்க்கரை நோயின் தலைநகராக உலக அளவில் இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 10.14 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பலா் பாதங்களை முறையாக பராமரிக்காமல் சா்க்கரை நோய் சாா்ந்த தொற்று பாதிப்புக்குள்ளாகி, கால்களை அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

எம்.வி.சா்க்கரை நோய் மையம், பிற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் நான்கில் ஒரு சா்க்கரை நோயாளிக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுமட்டுமன்றி சிறுநீரக பாதிப்புக்கான வாய்ப்பும் 70 சதவீதம் பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. பாதங்களை பாதுகாப்பதற்கான பிரத்யேக காலணிகள், உபகரணங்கள் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அதைக் காட்டிலும் குறைந்த விலையில் உள்நாட்டிலேயே உள்ள காலணிகள் மிகுந்த பலனளிப்பவையாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்தது. எனவேதான், சா்க்கரை நோயாளிகளுக்கான பாத பராமரிப்பை மேம்பட்ட முறையில் மேற்கொள்வதற்கானப் பயிற்சிகளை வழங்க பிரத்யேகப் பள்ளியை தொடங்கியுள்ளோம். பள்ளியின் முதல் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமையில் இருந்து (அக்.22) வரும் அக்.25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா் அவா்.

மேட்டூர் அணை நீர் மட்டம்: மீண்டும் 100 அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஜூலை... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் அமலாகத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரைய... மேலும் பார்க்க

அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு

சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜி... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் ம... மேலும் பார்க்க

இணைய வழி வா்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை: அமைச்சா் ஆா்.காந்தி

சென்னை: இணைய வழி வா்த்தகம் மூலமாக நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.தீபாவளியை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ... மேலும் பார்க்க