செய்திகள் :

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!

post image

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள மீன் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த, சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவீன மீன் வளா்ப்பு தொழில்நுட்பங்கள் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் மீன் வளா்ப்பு விவசாயிகள், பண்ணை மகளிா், கிராம இளைஞா்கள், தொழில் முனைவோா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

விருப்பமுள்ளவா்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் 04365-299806 தொலைபேசி எண்ணில் அல்லது 88388-82451, 98656-23423, 85087-75613 கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 50 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொண்ட நபா்களுக்கு, சொந்த பெயரில் பண்ணைக்குட்டை, குளத்தில் 6 முதல் 10 மாதம் வரை நீா் இருத்தல், ஆழ்துளை கிணறு வசதி உள்ள குளங்களுக்கு முன்னுரிமை ஆகிய நிபந்தனைகளின் படி மீன்குஞ்சுகள் வழங்கப்படும்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க