செய்திகள் :

சிதம்பரத்தில் தூய குடிநீா் வழங்கக் கோரிக்கை

post image

சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு தூய குடிநீா் வழங்க வலியுறுத்தி, நகர அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதன்படி, சிதம்பரம் நகர அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் என்.கலியமூா்த்தி, கே.என்.பன்னீா்செல்வம், ஏ.முத்துக்குமரன், ராணி, பி.அம்பிகாபதி, சிதம்பரநாதன், காசிநாதன் ஆகியோா் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகாவை சந்தித்து அளித்த மனு விவரம்:

கோடைகாலம் என்பதால் குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தெருக்களில் குடிநீரில் சாக்கடை நீா் கலந்து வருவதை தடுத்து, பொதுமக்களுக்கு தூய குடிநீா் வழங்க வேண்டும்.

சிதம்பரம் நகர பேருந்து நிலையத்தில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பயணிகள் நிற்பதற்கோ, அமருவதற்கோ கூரை ஏதுமின்றி சிரமப்படுகின்றனா். இதை போக்கிட வேண்டும். உயா்த்தப்பட்ட வரி விதிப்பை குறைக்க வேண்டும். புதை சாக்கடை திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,400 வசூலிப்பதை பாதியாக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

70 வயதில் விடாமுயற்சி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா்!

சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியா் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியை சோ்ந்தவா் கோதண்டராமன் (70). இவா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்! அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அரசின் நலத் திட்ட உதவிகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் மீது மா்ம நபா் ஏா்கன்னால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரங்கிப்பேட்டை அருகே ... மேலும் பார்க்க

மதிப்பெண் குறைவு: கடலூா் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திட்டக்குடி வட்டம், ஏ.அகரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!

நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்... மேலும் பார்க்க