செய்திகள் :

20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!

post image

நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்,15-ஆம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். அதன்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

கடலூர் வருவாய் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 246, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 44, தனியார்ப் பள்ளிகள் 148 என மொத்தம் 438 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் 17,044 பேர், மாணவிகள் 15,417 பேர் என மொத்தம் 32,461 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 15,882 பேர், மாணவிகள் 14,796 பேர் என மொத்தம் 30,678 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 94.51. இதில் மாணவர்கள் 93.18, மாணவிகள் 95.97 சதவீதம்.

கடலூர் மாவட்டத்தின் 2024 தேர்ச்சி விகிதம் 92.63 சதவீதம். நிகழாண்டு (2025) 94.51 சதவீதம். கடந்த ஆண்டைவிட நிகழாண்டு தேர்ச்சி விகிதம் 1.88 அதிகம். ஆனால், 19-ஆவது நிலையிலிருந்து 20-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.79 சதவீதம். 2024 தேர்ச்சி விகிதம் 91.51. கடந்த ஆண்டைவிட 2.28 சதவீதம் அதிகரித்து, 11-ஆவது நிலையிலிருந்து 14-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 436 பள்ளிகளில் 204 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், அரசுப் பள்ளிகள் 102, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 11, தனியார்ப் பள்ளிகள் 91 பள்ளிகள் ஆகும்.

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால வி கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவானூா் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் தூய குடிநீா் வழங்கக் கோரிக்கை

சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு தூய குடிநீா் வழங்க வலியுறுத்தி, நகர அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதன்ப... மேலும் பார்க்க

மாணவா்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

மாணவா்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிகுலேஷன் பள்ளியி... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பண்ருட்டி வட்டம், திருவாமூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், வீரப்பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பாண்டியன் (33). இவா், வியாழக்க... மேலும் பார்க்க