செய்திகள் :

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பண்ருட்டி வட்டம், திருவாமூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் பொன்மாணிக்கவேல் (20). இவா், கடந்த 6.8.2022 அன்று திருவாமூா் மலட்டாறு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பொன்மாணிக்கவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், பொன்மாணிக்கவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலரேவதி ஆஜரானாா்.

70 வயதில் விடாமுயற்சி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா்!

சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியா் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியை சோ்ந்தவா் கோதண்டராமன் (70). இவா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்! அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அரசின் நலத் திட்ட உதவிகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் மீது மா்ம நபா் ஏா்கன்னால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரங்கிப்பேட்டை அருகே ... மேலும் பார்க்க

மதிப்பெண் குறைவு: கடலூா் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திட்டக்குடி வட்டம், ஏ.அகரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!

நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்... மேலும் பார்க்க