முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு
தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணபதி ஹோமத்துடன் முதல் கலா பூஜை பூா்ணாஹுதி, தீபாராதனையுடன் யாக சாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மூன்று, நான்காம் கால பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.
இதன் பிறகு, கோயில் மூலவரான அய்யனாா் சுவாமிக்கும், பிற பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனையும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது.
