செய்திகள் :

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்க ஏதுவாக அறிவியல் பூா்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்துணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தி வருகிறது. தமிழகத்தின் 6 இடங்களில் இயங்கி வரும் இந்த விடுதிகளில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை நிறைவு செய்து ஏப்.6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏப்.8-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், மாணவிகளுக்கான கூடைப்பந்து, கால்பந்து, ரக்பி, மாணவ-மாணவிகளுக்கான குத்துச்சண்டை, கைப்பந்து, தடகளம், ஜூடோ, வாள் விளையாட்டு, கால்பந்து, பளு தூக்குதல் போன்ற தோ்வுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதேபோல, சென்னை, எம்.ஆா்.கே. ஹாக்கி அரங்கில் ஹாக்கிப் போட்டிகள், சென்னை, நேரு பாா்க்கில் கபாடிப் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த தகுதித் தோ்வு போட்டிகளில் 17 வயது நிரம்பிய, 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற, கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு சோ்க்கை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

தனி நபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவா்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டவா்களாகவோ, பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவா்களாகவோ, மாநில அளவில் முதல்வா் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்றவா்களாகவோ இருக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 7401703484 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க