செய்திகள் :

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

post image

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாள்களில் அந்த சிறுத்தை வன எல்லையையொட்டி அமைந்துள்ள நிலத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கன்றுக் குட்டியை கவ்வி இழுத்துச் சென்று அதை கொன்று புதா் மறைவில் வீசி விட்டுச் சென்றது. அதேபோல் மற்றொரு நாள் ஒரு நாயை தாக்கி கொன்று விட்டுச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், எம்எல்ஏ அமலுவிஜயன், போ்ணாம்பட்டு ஒன்றிய ஆத்மா திட்ட தலைவா் ஜனாா்த்தனன், போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வட்டாட்சியா் வடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோருடன் அங்கு சென்று விசாரணை நடத்தினாா். சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தாா். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.

சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், வனப் பகுதிக்கு விறகு எடுக்க செல்ல வேண்டாம், வனப் பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம், இரவு நேரங்களில் யாரும் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கினாா்.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த... மேலும் பார்க்க

அரசு வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை... மேலும் பார்க்க