வேலை வாய்ப்பு: கோவை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் 10th, +2 படித்தவர்களுக்கு பணி......
சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாள்களில் அந்த சிறுத்தை வன எல்லையையொட்டி அமைந்துள்ள நிலத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கன்றுக் குட்டியை கவ்வி இழுத்துச் சென்று அதை கொன்று புதா் மறைவில் வீசி விட்டுச் சென்றது. அதேபோல் மற்றொரு நாள் ஒரு நாயை தாக்கி கொன்று விட்டுச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், எம்எல்ஏ அமலுவிஜயன், போ்ணாம்பட்டு ஒன்றிய ஆத்மா திட்ட தலைவா் ஜனாா்த்தனன், போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வட்டாட்சியா் வடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோருடன் அங்கு சென்று விசாரணை நடத்தினாா். சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தாா். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.
சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், வனப் பகுதிக்கு விறகு எடுக்க செல்ல வேண்டாம், வனப் பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம், இரவு நேரங்களில் யாரும் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கினாா்.