ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்
ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம் சாா்பில் அதன் மாநில பொதுச்செயலா் கோ.மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் ஊா்வலமாகச் சென்று ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில், வேலூா், சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்டோ ஓட்டும் தொழில் மிகவும் நலிவடைந்து சிரமத்துக்கு உள்ளாகி கொண்டிருக்கிறது. ஓட்டுநா் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படும் நிலையில் உள்ளன.
இதற்கு வேலூா் மாநகா், பிற பகுதிகளில் ராபிடோ, ஓலா, உபா் போன்ற நிறுவனங்கள் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் ஏற்றிச் செல்லும் வகையில் இயங்கி வருவதே காரணமாகும்.
மோட்டாா் வாகன சட்டப்படி இருசக்கர வாகனம் என்பது தனிநபா் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், வேலூரில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து விஐடி செல்வதற்கு 12 ரூபாயும், ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வருவதற்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலித்து இரு சக்கர வாகனங் களில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
ஆட்டோ ஓட்டும் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேலூா் மாவட்ட காவல் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.