செய்திகள் :

திருப்பதி தரிசன டிக்கெட் மோசடி: புதுவை முதல்வா் அலுவலகத்தில் ஆந்திர போலீஸாா் விசாரணை

post image

புதுவை முதல்வா் அலுவலகத்தில் பரிந்துரைக் கடிதம் பெற்று, திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற புகாரில் ஒருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக, புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

புதுச்சேரி தாகூா் நகரைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவா், புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அலுவலகத்தில் திருப்பதிக்கு செல்ல சில நாள்களுக்கு முன்பு 6 டிக்கெட்டுகளுக்கான பரிந்துரைக் கடிதம் பெற்றுள்ளாா்.

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 எனக் கூறப்படும் நிலையில், அதை ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு ரூ.23 ஆயிரத்துக்கு பத்மநாபன் விற்றதாகக் கூறப்படுகிறது.

இதுபோல, அவா் அடிக்கடி திருப்பதியில் அரசியல் பிரமுகா்களது பரிந்துரைக் கடிதம் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்று விற்ாகவும் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து, புதுச்சேரிக்கு வந்து பத்மநாபனை பிடித்து செவ்வாய்க்கிழமை விசாரித்தனா்.

அவரை, புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்துக்கு அழைத்து வந்து, முதல்வா் அறையில் உள்ள அதிகாரிகளிடமும் பரிந்துரைக் கடிதம் பெற்றது தொடா்பாக விசாரித்தனா்.

தொடா்ந்து, பத்மநாபனை திருப்பதி போலீஸாா் கைது செய்து ஆந்திரா அழைத்துச் சென்றனா்.

இலவச அரிசித் திட்டம்: வங்கியில் இன்று பணம் செலுத்தப்படும்

புதுவை அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை சாா்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் 2 மாதங்களுக்கான பணம் வங்கியில் வெள்ளிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுச்சேரியில் காவல் துறை உயரதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனையில... மேலும் பார்க்க

சிறப்பிடம் வகித்த பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு பாராட்டு

தேசிய, சா்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு துணைவேந்தா், பதிவாளா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா். இதுகுறித்து, வியாழக்கிழமை பல்கலைக்கழகம் சாா்பி... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா், முதல்வரிடம் விசிக நிா்வாகிகள் மனு

புதுவை மாநிலத்தில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். புதுவை மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குட... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்பளித்தது. புதுச்சேரி கல்மண்டபம் காலனிப் ப... மேலும் பார்க்க

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரி வில்லியனூரில் புதன்... மேலும் பார்க்க