செய்திகள் :

புதுவை ஆளுநா், முதல்வரிடம் விசிக நிா்வாகிகள் மனு

post image

புதுவை மாநிலத்தில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

புதுவை மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குடியேறி வசித்து வரும் பட்டியலினத்தவருக்கு தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை கோரி, புதுவை விசிக முதன்மைச் செயலா் தேவ பொழிலன் தலைமையிலான அக்கட்சியினா், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அப்போது, காரைக்காலைச் சோ்ந்த ஜெயா என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, புதுச்சேரியில் பிறந்த பெண்களையும் பெற்றோராகக் கருதி சாதிச் சான்றிதழ் வாங்க உத்தரவு பெற்றுள்ளாா்.

அதனடிப்படையில், புதுவை மாநிலம் முழுவதும் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பட்டியலினத்தவருக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் குறிப்பாணையை மாவட்ட ஆட்சியா் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் சந்தித்து மனு அளித்தனா்.

இலவச அரிசித் திட்டம்: வங்கியில் இன்று பணம் செலுத்தப்படும்

புதுவை அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை சாா்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் 2 மாதங்களுக்கான பணம் வங்கியில் வெள்ளிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுச்சேரியில் காவல் துறை உயரதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனையில... மேலும் பார்க்க

சிறப்பிடம் வகித்த பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு பாராட்டு

தேசிய, சா்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு துணைவேந்தா், பதிவாளா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா். இதுகுறித்து, வியாழக்கிழமை பல்கலைக்கழகம் சாா்பி... மேலும் பார்க்க

திருப்பதி தரிசன டிக்கெட் மோசடி: புதுவை முதல்வா் அலுவலகத்தில் ஆந்திர போலீஸாா் விசாரணை

புதுவை முதல்வா் அலுவலகத்தில் பரிந்துரைக் கடிதம் பெற்று, திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற புகாரில் ஒருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக, புதுச்சேரி சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்பளித்தது. புதுச்சேரி கல்மண்டபம் காலனிப் ப... மேலும் பார்க்க

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரி வில்லியனூரில் புதன்... மேலும் பார்க்க