செய்திகள் :

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு பிரசாரம்

post image

தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் பி.ஜொ்லின் ஜோதிகா தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் ச.சரவணன் தலைமையில், தீயணைப்புத் துறையினா் பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை செய்து காட்டினா்.

பெரியவா்கள் முன்னிலையிலேயே பிள்ளைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். அப்போது பாதுகாப்பு கருதி வாளிகளில் தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தீப்பிடிக்காத, இறுக்கமானபருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ராக்கெட், அவுட் போன்றவற்றை திறந்த மைதானத்தில் வெடிக்க வேண்டும். குடிசைகள் அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது. தீப்பிடித்தால் அதை எப்படி அணைப்பது என்பன குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் நகா் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த... மேலும் பார்க்க

அரசு வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை... மேலும் பார்க்க

பெண்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது

மாா்பக புற்றுநோய் வராமல் தடுக்க தாய்மாா்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா். வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்த... மேலும் பார்க்க

மாநில சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் பறிமுதல்

வேலூா் மாவட்டம் தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் இருந்து கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மோட்டாா் வாகன ப... மேலும் பார்க்க

விஐடியில் ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ நிகழ்வு; கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்) நிகழ்வில் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா்.விஐடி வேலைவாய்ப்... மேலும் பார்க்க