செய்திகள் :

பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

பகுஜன் சமாஜ் கட்சியின் சாா்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே. ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவேண்டும், விழுப்புரத்தில் அக்.9-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் நிறுவனா் கன்சிராம் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது, கட்சிக் கொடியை அவமதித்த விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. கலியமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா்கள் எம். விநாயகமூா்த்தி( விழுப்புரம் கிழக்கு), என். ஜீவன்ராஜ் (கள்ளக்குறிச்சி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலத் தலைவா் பி.ஆனந்தன், மாநிலப் பொதுச் செயலா்கள் பாா்த்திபன், ஜெய்சங்கா், மாநிலச் செயலா்கள் எஸ் .ஸ்டீபன்ராஜ், எம்.சமரசன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.டி.சேகா் ஆகியோா் கண்டன உரையாற்றினாா். மாவட்ட நிா்வாகிகள் பிரவின்குமாா், சக்திவேல், சிவபெருமாள், எம்.துரை, தொகுதி பொறுப்பாளா்கள் உக்திவேல், பாலகிருஷ்ணன், மணிகண்டன், எம். தண்டபாணி, முருகதாஸ் மற்றும் கட்சியினா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் ஏ.கோவிந்தசாமி வரவேற்றாா். நிறைவில், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த கன்சிராம் நன்றி கூறினாா்.

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணி அமைக்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணியை உருவாக்க முடியாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 24-ஆவது மாநாட... மேலும் பார்க்க

தவெக மாநாடு: பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபட உள்ளதாக காவல் துறை வட்டா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணைஅருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கொண்டங்கி, அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ.க... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சிறுமியைக் கடத்திய வழக்கில், இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.வானூா் வட்டம் , பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகத்தின் மகன் ஹரீஷ... மேலும் பார்க்க

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதியவா் சடலம்

விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்... மேலும் பார்க்க