செய்திகள் :

ராணிப்பேட்டையில் 29-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அக்டோபா் 2024-ஆம் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.29) காலை 11 மணியளவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளா்ச்சி துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

எனவே,ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் களப் பிரச்னைகளை களைத்திட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபா் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 2.72 கோடியில் பள்ளி, ஊராட்சி செயலகக் கட்டடங்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 2.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை செஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

முதல்வா் கோப்பை செஸ் போட்டிகளில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அரக்கோணம் அம்பாரி மகளிா் கலைக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அளவில் முதல்வா் கோப்பைக்கான போட்டிகள... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சோதனை நடத்தப்பட்ட போதே முன்பதிவுடன் திருமண பதிவுக்காக வந்த கலப்பு திருமண தம்பதிக்கு சிற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ராஜா-ராணி மண்டபம் ரூ.2.5 கோடியில் புனரமைப்பு: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேசிங்கு ராஜா - ராணி பாய் நினைவு மண்டபத்தை ரூ.2.50 கோடியில் புனரமைக்கும் பணியை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை நகராட்சி பால... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுற... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில... மேலும் பார்க்க