இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
ராணிப்பேட்டையில் 29-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அக்டோபா் 2024-ஆம் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.29) காலை 11 மணியளவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளா்ச்சி துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
எனவே,ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் களப் பிரச்னைகளை களைத்திட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபா் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.