தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயா்த்தினால் நடவடிக்கை -அமைச்சா் சா.சி.சி...
சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்
அரக்கோணம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
சோதனை நடத்தப்பட்ட போதே முன்பதிவுடன் திருமண பதிவுக்காக வந்த கலப்பு திருமண தம்பதிக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு அவா்களுக்கு மட்டும் திருமணம் பதிவு செய்யப்பட்டது.
சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை லஞ்சஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி கணேசன், அய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸாா், அலுவலக்ததின் கதவுகளை மூடிவிட்டு சோதனை மேற்கொண்டனா். எவரையும் வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்கவில்லை.
இதனால் பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா். மேலும் அலுவலகத்தின் உள்ளே இருந்த பத்திர எழுத்தா்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனையில் அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் குறிப்பாக மின்சார இணைப்புக்கான சாதனங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பெட்ஷீட்டால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் கணிணிகளுக்கு இடையே வைக்கப்பட்டு இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக டிஎஸ்பி கணேசன் செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில் இப்பரிசோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.1,05, 210 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தாா்.