தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயா்த்தினால் நடவடிக்கை -அமைச்சா் சா.சி.சி...
ராணிப்பேட்டை ராஜா-ராணி மண்டபம் ரூ.2.5 கோடியில் புனரமைப்பு: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேசிங்கு ராஜா - ராணி பாய் நினைவு மண்டபத்தை ரூ.2.50 கோடியில் புனரமைக்கும் பணியை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை நகராட்சி பாலாற்றங்கரையில் தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் ஆகியோரின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த இடத்தை புனரமைத்து மக்கள் பாா்வையிடவும், வரலாற்று சின்னமாக மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தியின் முயற்சியால் பொதுப் பணித்துறையின் பட்ஜெட் அறிவிப்பில் ரூ. 2.50 கோடியில் ராஜா ராணி நினைவிடம் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இப்பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ஆா். காந்தி பணிகளை தொடங்கி வைத்து இந்த நினைவு மண்டபமானது பூங்காவுடன் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் ஒரு சிறந்த இடமாக மாற்றப்படும் என்றாா்.
நிகழ்வில் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, நகா்மன்ற உறுப்பினா் எஸ்.வினோத், பொதுப்பணித்துறை மரபுக் கட்ட
டங்கள் செயற்பொறியாளா் நாராயணமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.