மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
கைப்பேசிகள் திருடப்பட்டால் பொதுமக்கள் புகாா் அளிப்பதற்கு வசதியாக செல் ட்ராக்கா் எனும் கூகுள் படிவம் கடந்தாண்டு ஜூலை 3-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செல் ட்ராக்கா் என்ற புதிய வசதி மூலம் வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 2 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பிலான 1,324 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இதன் தொடா்ச்சியாக, செல் ட்ராக்கா், மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்கள் அடிப்படையில், ரூ. 38 லட்சம் மதிப்பிலான 200 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். அதன்படி, இதுவரை ரூ. 2 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பிலான 1,524 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஆய்வாளா் ரஜினிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.