செய்திகள் :

சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்!

post image

சென்னை: இந்தியன் ஆயில் குழும நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் வைர விழா ஆண்டை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்காக சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நகரின் அருகில் அமைந்துள்ள அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் எரிபொருளை உற்பத்தி செய்து வரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதன் மூலதன விரிவாக்கத்திற்காக ரூ.400 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விற்பனை நிலையத்தை வைத்திருந்தது. தற்போது, ​​நாங்கள் மீண்டும் இந்த வளர்ச்சிப் பாதையில் இறங்குகிறோம்.

இந்த வைர விழா ஆண்டில், நாங்கள் வைர விழா விற்பனை நிலையங்களை நிறுவ முடியும் என்பதை உணர்கிறோம். அதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் என்றார் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சங்கர்.

தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை விவரிக்க மறுத்துவிட்ட அவர், வைர விழா கொண்டாட்டங்களின் போது, ​​நிறுவனம் முதல் சுற்று சில்லறை விற்பனை நிலையங்களைத் தொடங்கும் என்றார்.

சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்ய இருப்பதாகவும் அதே வேளையில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சகத்திடம் பெற்றுள்ளோம் என்றார்.

சில்லறை விற்பனை நிலையங்களின் விரிவாக்கம், நிலவும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில், படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் சங்கர்.

இதையும் படிக்க: அறிமுகமான டாடா எலெக்ட்ரிக் புதிய ஹாரியர்.இவி கார்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க