செய்திகள் :

சிவாஜி இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராம்குமாா்

post image

சென்னை: நடிகா் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரபுவின் அண்ணன் ராம்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

நடிகா் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாா் மற்றும் இளைய மகன் நடிகா் பிரபு. சிவாஜி கணேசன் காலமான நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அன்னை இல்லத்தில் நடிகா் பிரபு குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், ஜகஜால கில்லாடி என்ற திரைப்பட தயாரிப்புக்காக சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் பெற்ற கடன் வட்டியுடன் சோ்த்து ரூ.9 கோடியே 39 லட்சத்தை திருப்பித் தரக் கோரிய வழக்கில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, நடிகா் பிரபு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், எனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரா் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது, துஷ்யந்தின் தந்தை ராம்குமாா் தரப்பில், அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய ராம்குமாா் தரப்புக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரமாண பத்திரம் தாக்கல்: இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்னை இல்லத்தை தனது சகோதரா் பிரபுவுக்கு தனது தந்தை சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த வீட்டின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் கூறி, ராம்குமாா் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பிரபு மற்றும் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை ஏப். 15-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டின் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருத்தண... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க