செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

post image

ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோகைன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகா் அடிஸ் அபாபாவில் இருந்து நேற்று அதிகாலை சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் அதிக அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலையில் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த அந்த குறிப்பிட்ட பயணிகள் விமானத்தில் வந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கண்காணித்தனா். அதில் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்த கென்யா நாட்டைச் சோ்ந்த 28 வயது இளைஞா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதனைத் தொடர்ந்து அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடமைகளை சோதனையிட்டனர். அதில், சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த சாக்லேட் பாக்கெட்டுகளை எடுத்து, பிரித்துப் பார்த்தபோது, கோகையின் போதைப் பொருளை சாக்லேட் போல் தயார் செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடி.

இதையடுத்து கென்யா நாட்டு இளைஞரை கைது செய்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கோகையின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட கென்யா நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி- தில்லிக்கு நேரடி விமானச் சேவை தொடக்கம்: முதல் நாளில் 76 போ் பயணம்

Officials at Chennai airport seized cocaine worth Rs. 20 crore smuggled into Chennai from an African country

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினர்கள் வியாழக்கிழமை குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழம... மேலும் பார்க்க

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று ஏற்ற, இறக்கமாக ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், ... மேலும் பார்க்க

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

மும்பை: மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.திங்கள்கிழமை கு... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,342 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறை... மேலும் பார்க்க