செய்திகள் :

சென்னை: 5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தல்; கோடீஸ்வரனாக ஆசைப்பட்ட பட்டதாரியின் மாஸ்டர் பிளான்!

post image

சீனாவிலிருந்து சரக்கு கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் கன்டெய்னரில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான note pad கொண்டு வரப்பட்டது. நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் துறைமுகத்தில் உள்ள சென்னை இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் யார்டில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து லேப்டாப் கம்பெனியிலிருந்து கன்டெய்னரை எடுத்துச் செல்ல செப்டம்பர் 11-ம் தேதி அதிகாரிகள் வந்தனர். அப்போதுதான் அந்த கன்டெய்னரைக் காணவில்லை.

அது தொடர்பாக துறைமுகம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதியே கன்டெய்னர் போலி ஆவணங்கள் கொடுத்து எடுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரைக் கடத்திய கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நரேந்திர நாயர் மேற்பார்வையில் இணை கமிஷனர் பர்வேஸ் குமார், துணை கமிஷனர் சுந்தரவடிவேல் வழிகாட்டுதலின்படி உதவி கமிஷனர் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் சிலம்புசெல்வன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கடத்தப்பட்ட கன்டெய்னரையும் நோட் பேடுகளையும் கடத்தல் கும்பலையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.

கைதான கடத்தல் கும்பல்

இந்தச் சம்பவம் குறித்து துறைமுகம் உதவி கமிஷனர் ராஜசேகரனிடம் பேசினோம். ``5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தப்பட்டதாக புகார் வந்ததும் கன்டெய்னரை எடுத்துச் செல்ல அனுமதித்த ஊழியர்களிடமிருந்து விசாரணையைத் தொடங்கினோம். அப்போது கன்டெய்னரை யார்டிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் வெளியில் செல்ல அனுமதித்தது சென்னை இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் ஊழியர் திருவொற்றியூரைச் சேர்ந்த இளவரசன் எனத் தெரிந்தது. ஆனால் அவர் செப்டம்பர் 7-ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை. அதனால் அவரைத் தேடி வந்தநிலையில் கடத்தப்பட்ட கன்டெய்னரில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதனால் ஜி.பி.எஸ் கருவிகளின் சிக்னலை ஆய்வு செய்தபோது அது திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரைக் காட்டியது. உடனடியாக அங்குச் சென்று பார்த்தபோது கடத்தப்பட்ட கன்டெய்னர் இல்லை. ஆனால் சிக்னல் காட்டிய இடத்தில் இரண்டு லாரிகள் அநாதையாக நின்றன. 

அந்த லாரிகளை ஆய்வு செய்தபோது அதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோட் பேடுகள் இருந்தன. இதையடுத்து 5,200-க்கும் மேற்பட்ட நோட் பேடுகளையும் இரண்டு லாரிகளையும் துறைமுகம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். இதுதொடர்பாக  திருவள்ளூர் மாவட்டம் எஸ்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த டிரெய்லர் லாரி டிரைவர் மணிகண்டன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பால்ராஜ், கடத்தலுக்கு உதவிய  திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ்,நெப்போலியன், சிவபாலன், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த முத்துராஜ், அரசு பஸ் டிரைவர் சங்கரன் ஆகிய ஏழு பேரைக் கைது செய்தோம். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட கன்டெய்னரைப்  பறிமுதல் செய்தோம். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இளவரசன், அவரின் அக்காள் மகனான விக்கி என்கிற சின்னசாமி ஆகியோரைத் தேடிவந்தோம்.

நோட் பேடுகளை மொத்தமாக விற்க முடிவு செய்து பெங்களூரு, மும்பைக்கு இளவரசன், விக்கி ஆகியோர் சென்ற தகவல் கிடைத்தது. அதனால் அவர்களைத் தேடிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்தபோது கன்டெய்னரில் வந்த நோட்பேடுகளைத் திருடியதற்கான காரணம் தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் துரிதமாக செயல்பட்டு 9 பேரையும் கடத்தப்பட்ட கன்டெய்னர், 34 கோடி ரூபாய் மதிப்பிலான நோட் பேடுகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்" என்றார்.

லாரிகள்

இந்த வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``கைது செய்யப்பட்ட இளவரசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருவொற்றியூர் பகுதியில் அம்மா, சகோதரி என கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். தற்போது 33,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை செய்து வரும் இளவரசன், பி.ஏ. ஆங்கிலம் படித்திருக்கிறார். இவரின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவச் செலவுக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார். அதோடு ஆடம்பரமாக வாழ்ந்ததால் இளவரசனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்டிருக்கிறது. கடன் தொல்லையால் நிம்மதியிழந்த இளவரசன், ஏதாவது செய்து கோடீஸ்வரனாக ஆசைப்பட்டிருக்கிறார்.

இந்தச் சமயத்தில்தான் 34 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்பேடுகள் யார்டில் வைக்கப்பட்ட தகவல் இளவரசனுக்கு தெரியவந்தது. அதற்குரிய பில், ஆவணங்கள் அனைத்தையும் பார்த்த இளவரசன், கன்டெய்னரை கடத்த தன்னுடைய கூட்டாளிகளுடன் திட்டமிட்டார். இதையடுத்து கன்டெய்னரை துறைமுகத்தின் யார்டிலிருந்து வெளியில் செல்ல போலியான ஆவணங்களை தயாரித்த இளவரசன், அதை தன்னுடைய அக்காள் மகன் விக்கி மூலம் வெளியில் எடுத்துச் சென்றிருக்கிறார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில்  வைத்து கன்டெய்னரை உடைத்து நோட் பேடுகளை திருட முயன்றபோதுதான் அதில் ஜிபி்எஸ் கருவி இருப்பதை பார்த்து இளவரசனும் அவரின் கூட்டாளிகளும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

இளவரசன்

பாபநாசம் படத்தில் வரும் காட்சியைப் போல ஜிபிஎஸ் கருவிகளை வடமாநிலத்துக்குச் சென்ற ஒரு லாரியில் போட்டிருக்கிறது அந்தக் கும்பல். ஆனால் நோட் பேடுகளுக்கான ஒரிஜினல் ரசீது இல்லாததால் பெங்களூரு, மும்பையில் அவற்றை யாரும் வாங்கவில்லை முன்வரவில்லை. கன்டெய்னருடன் கடத்தப்பட்ட நோட் பேடுகளை விற்க முடியாத சூழலில் இந்தக் கும்பல் எங்களிடம் சிக்கிக் கொண்டது. இந்தக் கடத்தல் வழக்கில் அரசு போக்குவரத்து கழக டிரைவர் சங்கரன் என்பவரும் சிக்கியிருக்கிறார்" என்றனர்.

சென்னை: இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை - சஸ்பெண்ட் காவலர் சிக்கிய பின்னணி

தென்சென்னையைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றம்) என்ற இளம்பெண், ஸ்பா ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 17.10.2024-ம் தேதி தன்னுடைய கணவருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். வரும் வழியில் ... மேலும் பார்க்க

சென்னை: நைஜீரிய நெட்வொர்க்குடன் தொடர்பு; போதைப்பொருள் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன்... மேலும் பார்க்க

கணவன் கொலையில் சிக்கிய மனைவி; உடந்தையாக இருந்த விசிக நிர்வாகியும் திடீர் தற்கொலை - நடந்தது என்ன?!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிரா... மேலும் பார்க்க

சென்னை: போதையில் நடந்த தகராறில் நடத்துநர் உயிரிழப்பு; பயணி கைது; நடந்தது என்ன?

சென்னை மாநகர பேருந்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருபவர் ஜெகன்குமார். நேற்று (அக்டோபர் 24), அவர் எம்.பி.கே நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் பணியிலிருந்திருக்கிறார். வேலூரைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சேலம்: அரசு மருத்துவமனையில் பெண் மீது தாக்குதல் - புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததா போலீஸ்?

சேலம் மாநகரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வந்து செல்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே... மேலும் பார்க்க