செய்திகள் :

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக.10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதனைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளை உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21, திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 25 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, தோ்தல் நடைமுறைகளை தொடங்கிய தோ்தல் ஆணையம், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளா் பட்டியலை இறுதிசெய்ததாக வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

The Election Commission of India announced on Friday that voting for the Vice Presidential election will be held on September 9.

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் தலைமையில் நேற்... மேலும் பார்க்க

மக்களவைத் தேர்தல் மோசடி: 6.5 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள்! - ராகுல்

போலி வாக்காளர்கள் மூலம் மோசடி செய்து மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ... மேலும் பார்க்க

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அங்கு சுமார் ரூ. 2,183.45 கோடி மதிப்பிலான 52 மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடி... மேலும் பார்க்க

தலையிலிருந்த பெரிய பை விழுந்ததே தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலுக்குக் காரணம்: அஸ்வினி வைஷ்ணவ்

புது தில்லி: ஒரு பயணியின் தலையில் இருந்த மிகப்பெரிய மூட்டை பிற பயணிகள் மீது விழுந்ததன் தொடர்ச்சியாகவே, பிப். 15 தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ... மேலும் பார்க்க

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க