செய்திகள் :

சேலம்: அரசு மருத்துவமனையில் பெண் மீது தாக்குதல் - புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததா போலீஸ்?

post image

சேலம் மாநகரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 5000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அப்படி வரும் நோயாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை என்கிறார்கள். காரணம், தினந்தினம் செல்போன் திருட்டு, பைக் திருட்டு சம்பவங்கள் என குற்றசம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் நேற்று மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை பிரிவில் ஒரு பெண் தாக்கப்பட்டிருக்கிறார்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் தனது தாயுடன் நேற்று இரவு 9 மணியளவில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் அடிப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது சித்தப்பாவை சந்திக்க வந்துள்ளார். அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் ஜெயந்தியை தலை முடியை இழுத்துப்போட்டு தாக்கியுள்ளார். அப்போது உறவினர்கள் தடுத்தும் அந்த நபர் ஜெயந்தியை விடாமல் தாக்கியுள்ளார்.

கார்த்திக்

பின்னர் அக்கம்பக்கத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் உறவினர்கள் ஓடிவந்து ஜெயந்தியை அந்நபரிடமிருந்து மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீஸார் விசாரணை செய்தனர். அதில், தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், ஜெயந்தியின் அண்ணன் என தெரியவந்தது. அதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர் மதுபோதையில் இருந்ததால் போலீஸார் அந்நபரை கண்டித்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான ஜெயந்தி, ``நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஆடையெல்லாம் கிழித்து அசிங்கப்படுத்தி, கொலை வெறியுடன் தாக்கிய நபர் மீது நடவடிக்கை வேண்டும்” என்று போலீஸாரிடம் கூறியுள்ளார் அதற்கு புகாரெல்லாம் வாங்க முடியாது என்று போலீஸார் சொன்னதாக குற்றம்சாட்டுகிறார்கள் ஜெயந்தி தரப்பினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயந்தியிடம் பேசியபோது, “எனக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. நான் கலப்புத்திருமணம் செய்தேன் என்ற காரணத்திற்காக எனது அண்ணன் கார்த்தி 17 வருடமாக பேசாமல் இருந்தார். நானும் அப்படி தான் இருந்தேன். மற்றப்படி எனது உறவினர்கள் அனைவரும் என்னிடம் நல்லாதான் பேசுவாங்க. அதன்மூலம் தான் இன்று எனது சித்தப்பாவை பார்க்க வந்தேன். ஆனால் வந்த இடத்தில் கொலை வெறியுடன் என்னையும், எனது அம்மாவையும் கார்த்தி தாக்கினார். அதுலயும் என்னை பொதுவெளியில் ஆடையை கிழித்து அசிங்கப்படுத்தி அடித்தார்.

காவல்துறை

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது அவர்கள், என்னிடம் `அதெல்லாம் வேண்டாம் சும்மா போம்மா, அவன் இனிமேல் எதாவது பிரச்னை செய்தால் இந்த செல் நம்பருக்கு கால் பண்ணுன்னு’ சொல்றாங்க. ஆனால் நான் பாதிக்கப்பட்டது தொடர்பாக கொடுத்த புகாரை வாங்காமல் என்னை சமாதானப்படுத்தி அனுப்புறாங்க. ” என்று கதறி கண்ணீர் வடித்தார்.

இதுகுறித்து அரசு மருத்துவனை காவல் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டு பேசினோம், அப்போது நம்மிடம் பேசிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி, ``சார் அது குடும்பப் பிரச்னை, அக்கா - தம்பிக்குள் தகராறு. இதில் நாங்க என்ன செய்யமுடியும். அதான் அந்த பையனை கண்டித்து அனுப்பினோம். இன்னும் அந்தப்பொண்ணு கண்டித்தது பத்தலைன்னு சொன்னா காலையில் வர சொல்லிருக்கோம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே... மேலும் பார்க்க

Fake Website: `99% ஆஃபரில் ஆப்பிள், சாம்சங் கேட்ஜெட்கள்' - மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

ஆண்டுதோறூம் கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல், பிக் பில்லியன் டேஸ் என்று ஆன்லைன் தளங்கள் ஆஃபர் அறிவிக்கும் சில தினங்கள் இருக்கின்றன. தீபாவளி, பொங்கல் என விழாக்காலங்களில் சில தள்ளுபடிகள் இருப்பது வழக்கம்தான்.... மேலும் பார்க்க

மூணாறுக்குப் பள்ளிச் சுற்றுலா; காவல் நிலையத்தில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்!

கேரளாவில் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள், கஞ்சா பீடி பற்றவைக்கத் தீப்பெட்டிக்காக ஒர்க ஷாப் கட்டடம் என்று நினைத்து உள்ளூர் காவல் நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்க... மேலும் பார்க்க

சென்னை: வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் - சிக்கியது எப்படி?

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னையில் கல்லூரி... மேலும் பார்க்க

அரசு வேலை; போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி... சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளாராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதங்களாக பணியில் இருந்தவர். இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த போது அரச... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அமர்ந்து ரகளை; திருப்பூர் இளைஞர் கைது; வைரலாகும் வீடியோ

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து கடந்த 21-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியே ... மேலும் பார்க்க