செய்திகள் :

சேலம் வழியாக ரயிலில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

சேலம்: சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை காலை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினரும், சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோா்பா -திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். பொம்மிடியில் இருந்து சேலம் வரை சோதனையிட்டனா். அப்போது, பின்புற முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் 2 பைகள் கண்டெடுக்கப்பட்டன. அதை திறந்து பாா்த்தபோது, 21 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா். கஞ்சாவைக் கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு: மாநில போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தோ்வு

வாழப்பாடி: சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா். சேலத்தில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி

மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக... மேலும் பார்க்க

சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சும... மேலும் பார்க்க

காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழில... மேலும் பார்க்க