செய்திகள் :

முதல்வா் கோப்பை விளையாட்டு: மாநில போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தோ்வு

post image

வாழப்பாடி: சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா்.

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி மாற்றுத்திறனாளி மஞ்சுளா, குண்டு எறிதல் போட்டியில் பாா்வையற்றோா் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

முத்தம்பட்டி திவ்யா காதுகேளாதோா் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சோமம்பட்டி கலைச்செல்வி உடல் இயக்கக் குறைபாடு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சிவரஞ்சன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட அளவில் தங்கம் வென்றதோடு, அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ள மாற்றுத்திறனாளி மஞ்சுளாவிற்கு டாக்டா் ஏபிஜே அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி

மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக... மேலும் பார்க்க

சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சும... மேலும் பார்க்க

காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழில... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலம்: சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 16) தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்க... மேலும் பார்க்க