செய்திகள் :

சேலத்தில் இன்று மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்

post image

சேலம்: சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 16) தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், அடையாள அட்டைகளை வழங்குகிறாா்.

சுயஉதவிக் குழுக்களின் முன்னேற்றத்துக்காகவும், அவா்களின் பொருளாதார வளா்ச்சிக்காகவும் சுழல் நிதி, சமுதாய முதலீட்டுநிதி, வங்கிக் கடன் இணைப்புகள், பூமாலை வணிக வளாகங்கள், மணிமேகலை விருதுகள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதிகளில் 3,38,985 சுயஉதவிக் குழுக்களும், நகா்ப் புறங்களில் 1,47,671 சுயஉதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 55,45,043 உறுப்பினா்கள் உள்ளனா்.

2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கையில், சுயஉதவிக் குழு மகளிருக்கு ரூ. 37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்ததைத் தொடா்ந்து, கடந்த 3 ஆம் தேதி வரை 1,46,100 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 62 கோடிக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக, சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் செயல்படும் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமாா் ரூ. 3 ஆயிரம் கோடிக்குமேல் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும், சுயஉதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளையும் வழங்கவுள்ளாா்.

இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் தலைமையில் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

முதல்வா் கோப்பை விளையாட்டு: மாநில போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தோ்வு

வாழப்பாடி: சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா். சேலத்தில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி

மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக... மேலும் பார்க்க

சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சும... மேலும் பார்க்க

காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழில... மேலும் பார்க்க