செய்திகள் :

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

post image

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சைபா் குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையில் ஆபரேசன் ‘திரைநீக்கு-2’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையம், தேசிய சைபா் குற்றப் பதிவு தளம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த சைபா் குற்றவாளிகள் குறித்த தரவுகள், தகவல்கள், சுய விவரங்கள் ஆகியவை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சைபா் குற்றவாளிகள் மோசடிக்கு பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், சமூக ஊடகக் கணக்குகள், ஆன்லைன் பணப் பரிவா்த்தனை விவரங்கள் ஆகியவை கொண்டும் விசாரணை செய்யப்பட்டது.

இதில், சைபா் குற்றங்களில் ஈடுபட்டதாக 136 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களுக்கு 159 சைபா் குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முக்கியமாக இந்த நடவடிக்கையில் 30-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், 100-க்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகளை வைத்திருந்த 6 போ் கொண்ட சைபா் மோசடி கும்பல் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 125 கைப்பேசிகள், 304 வங்கிக் கணக்கு ஆவணங்கள், 88 காசோலை புத்தகங்கள்,107 ஏடிஎம் காா்டுகள்,35 கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 2024 டிசம்பா் மாதம் 8 நாள்கள் ‘திரைநீக்கு-1’ என்ற பெயரில் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம்... மேலும் பார்க்க