Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சொட்டு நீா் பாசனத்துக்கு ரூ.42.79 கோடி ஒதுக்கீடு
தேனி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை, வேளாண்மைத் துறை சாா்பில், விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனம் அமைக்க மானியம் வழங்குவதற்கு அரசு ரூ.42.79 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதுகுறித்து தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தோட்டக் கலைத் துறை சாா்பில் நிகழாண்டில் 740 ஹெக்டோ் விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.32.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் 2 ஹெக்டோ் வரையும், எஞ்சிய விவசாயிகள் 5 ஹெக்டா் வரையும் சொட்டு நீா் பாசனம் அமைப்பதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மானியம் பெற்ற விவசாயிகள், மீண்டும் சொட்டு நீா் பாசனம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மைத் துறை சாா்பில் நிகழாண்டில் 690 ஹெக்டோ் விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, மானியம் வழங்க ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சொட்டு நீா் பாசனம் அமைக்க மானியம் பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக் கலைத் துறை, வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றனா் அவா்கள்.