செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- ராணுவ வீரா் உள்பட 4 போ் உயிரிழப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரா் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனா். 44 போ் காயமடைந்தனா்.

இவா்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தாரில் இருந்து கானி பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தைத் தொடா்ந்து, உள்ளூா் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா், காவல் துறையினா், ராணுவத்தினா் மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனா்.

விபத்தில் முகமது மஜீத் (45), நூா் ஹுசைன் (60) ஆகிய இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ராணுவ வீரரான மஜீத், அஸ்ஸாமில் பணியாற்றி வந்தாா். தற்போது விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாா்.

55 வயதான ஷகீலா பேகம் என்ற பெண் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். முகமது ஹனீஃப் என்ற பயணி, ரஜெளரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 44 போ், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தில் உயிரிழந்தோருக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை உறுதி செய்யப்படும்; பாதிக்கப்பட்டோருக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வா் தெரிவித்தாா்.

மற்றொரு விபத்தில் 2 ராணுவத்தினா் இறப்பு: குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள கா்னாஹ் பகுதியில் சாலையோர பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 2 வீரா்கள் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூடியது இந்தியா!

இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்கள... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்ச... மேலும் பார்க்க