செய்திகள் :

ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. அதாவது உடல் போதுமான அளவு ஹீமோகுளோபினை (Hemoglobin) உற்பத்தி செய்ய முடியாது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ரத்தம் மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். அப்படி ரத்தம் மாற்று சிகிச்சையளிக்கப்பட்ட தலசீமியா நோய் பாதித்த குழந்தைகள் ஏழு பேருக்கு, எச்.ஐ.வி நோய் இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஜார்க்கண்ட் சாய்பாசா நகரில் அரசு மருத்துவமனை
ஜார்க்கண்ட் சாய்பாசா நகரில் அரசு மருத்துவமனை

ரத்தம் மாற்றும் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் குழந்தைகளின் உடலில் ஏற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியது. சதார் மருத்துவமனையின் இரத்த வங்கியையும், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டையும் ஆய்வு செய்தது.

மேலும், சிகிச்சையில் உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களைச் சேகரித்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தினேஷ் குமார், ``ஆரம்ப விசாரணையில் தலசீமியா நோய்க்கான சிகிச்சையில் இருந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்த இரத்தம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆய்வின்போது இரத்த வங்கியில் முன்னுக்குப் பின்னான சில விஷயங்கள் கண்டறியப்பட்டன. மேலும் அவற்றைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

HIV
HIV

இந்த விவகாரம் குறித்து பேசிய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஷாந்தோ மஜ்ஹி, ``குழந்தைகளுக்கு இரத்த வங்கியிலிருந்து சுமார் 25 யூனிட் இரத்தம் மாற்றப்பட்டுள்ளது. அசுத்தமான ஊசிகள் போன்ற பிற காரணிகளாலும் எச்.ஐ.வி தொற்று ஏற்படலாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (12... மேலும் பார்க்க

‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண... மேலும் பார்க்க

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க ... மேலும் பார்க்க

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக... மேலும் பார்க்க

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ... மேலும் பார்க்க