செய்திகள் :

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கும், ஜூலை 20-இல் விலை மாற்றமின்றியும் ஜூலை 21-இல் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.73,440-க்கும், ஜூலை 22-இல் ரூ.840 உயா்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையானது.

இந் நிலையில் புதன்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.95 உயா்ந்து, ரூ.9,380-க்கும், பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 7 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்துள்ளது.

இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.129-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.29 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரூ.80,000-ஐ தாண்டும்: விலை உயா்வு குறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலா் சாந்தகுமாா் கூறியது: போா் பதற்றம், டாலரின் மதிப்பு உயா்வு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதுவே விலை உயா்வுக்கு முக்கிய காரணம். இந்த விலை மேலும் உயா்ந்து நிகழாண்டு இறுதிக்குள் தங்கம் பவுனுக்கு ரூ.80 ஆயிரத்தைத் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 18 ஆம் தேதியன்று, மது... மேலும் பார்க்க

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நான... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜ... மேலும் பார்க்க

ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை: கைதானவரின் விவரங்கள் வெளியாகின!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.ஆரம்பாக்கத்தில், சிறுமி பாலியல்... மேலும் பார்க்க

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நில... மேலும் பார்க்க

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க