செய்திகள் :

தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

post image

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி பல்வேறு சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதையும் படிக்க: சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

இந்நிலையில், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தண்டனைக் கைதிகளுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தால் தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ, அவசர விடுப்போ வழங்கத் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனைக் கைதிகளுக்கு எதிரான வேறு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தால், அந்த கைதிக்கு விடுப்பு பெற இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து கைதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத... மேலும் பார்க்க

ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் மு... மேலும் பார்க்க

ராகுல் இன்று சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று(பிப். 11) சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு!

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப்படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார்: அமைச்சர் காந்தி

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று(பிப். 10) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற... மேலும் பார்க்க