செய்திகள் :

தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு: ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர்

post image

சென்னை: குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் ஜி.பி. கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.

ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் கோதண்டராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த வழக்கில் 28 சாட்சிகளை விசாரணை செய்து சாட்சிகள் அனைத்தையும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு எதிர்வாதம் எல்லாம் முடிந்து இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எதிரி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டதாகக் கூறி அவரை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தண்டனை விபரங்களை திங்கட்கிழமை ஜூன் 2 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் சொல்லியுள்ளது. தண்டனை விவரம் தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்போம். மேல்முறையீடு போவது குறித்து முடிவெடுக்கப்படும்.

ஞானசேகருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். குற்றச்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தளவில் ஞானசேகர் மட்டும் தான் குற்றவாளி என காட்டப்பட்டுள்ளது. வேறு யாரேனும் குற்றவாளி இருக்கிறாரா என்பதை போலீஸ் தரப்போ அல்லது நீதிமன்றமோ சுட்டிக்காட்டவில்லை. நீதிமன்றத்தால் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறு என்ன இருக்கும் என்பதை பார்த்து மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா என யோசிப்போம்!

அரசு எங்களுக்கு இதைச் சொல்லி உள்ளது. நீதிமன்றம் சொல்லி உள்ளதால் நாங்கள் இதை தலையாய கடமையாக எடுத்துக் கொண்டு நேர்மையாக நடத்தி உள்ளோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி திமுக சார... மேலும் பார்க்க

திலகபாமாதான் பொருளாளர்: ராமதாஸுக்கு அன்புமணி பதில் அறிக்கை!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை பாமகவின் புதிய பொருளாளராக நியமித்துள்ளார். பாமக ... மேலும் பார்க்க

பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ப... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் (மே 30, 31) எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(மே 30) மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் நடத்தும் பாஜக அரசு! பொதுக்குழுவுக்கு ஸ்டாலின் அழைப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கட்ச... மேலும் பார்க்க

கட்சியைக் கைப்பற்றுகிறாரா அன்புமணி? பெரும்பாலான மாவட்ட செயலர்கள் வருகை!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி அழைப்பை ஏற்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ... மேலும் பார்க்க