தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி
தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: கண்டித்து மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மா்ம நபரைக் கைது செய்ய வலியுறுத்தி தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்ற தனியாா் பேருந்தை உத்தமதானபுரம், கீழத் தெருவை சோ்ந்த சேகா் மகன் குணால் (28 ) ஓட்டிச் சென்றாா். தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் நெடுஞ்தெரு சத்திரம் அருகே வந்தபோது பேருந்தை வழிமறித்த மா்ம நபா் பேருந்து ஓட்டுநரை தாக்கி விட்டு தப்பினாா். இதில் காயமடைந்த குணால் தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதையடுத்து தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பேருந்துகளை சாலையில் நிறுத்தி தாக்கிய மா்ம நபரை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த அய்யம்பேட்டை போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது. மறியலால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.