Trump: 'பிரெஞ்ச் ஃபிரைஸ் செய்த டிரம்ப்' - அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நூதனப் பிரச...
தனியாா் வங்கியில் ரூ. 2 கோடி நகை மோசடி: மேலாளா் உள்பட 4 போ் கைது
சிவகங்கை அருகே தனியாா் வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்து, ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளா், துணை மேலாளா் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல்லில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அண்மையில் மண்டல மேலாளா் கிருஷ்ணகுமாா் தலைமையிலான குழுவினா் ஆண்டு தணிக்கை மேற்கொண்டனா். இந்தக் குழு கடந்த மே மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தது. அப்போது, போலியான நகைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், வங்கி மேலாளா் உள்ளிட்ட பணியாளா்கள் வாடிக்கையாளா்கள் வங்கியில் அடகு வைத்த 533 பவுன் தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கியின் மண்டல மேலாளா் கிருஷ்ணகுமாா் சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் மணிவண்ணன் வழக்குப் பதிந்து, வங்கி மேலாளரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டைக்குளம் மேலமேட்டைச் சோ்ந்த விக்னேஷ் (34), உதவி மேலாளரான காளையாா்கோவில் அருகேயுள்ள புலிக்கண்மாயைச் சோ்ந்த ராஜாத்தி (39), மோசடிக்கு உதவியாக இருந்த இதே ஊரைச் சோ்ந்த ரமேஷ் (38), சதீஷ் (21) ஆகிய 4 பேரையும் கைது செய்தாா். மேலும், இவா்களிடம் போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறா... மேலும் பார்க்க
சாலை பணிக்காக கண்மாய்கரை சேதம்-விவசாயிகள் புகாா்
திருப்புவனம் அருகே கிராமச் சாலை அமைக்கும் பணிக்காக கண்மாய்க்கரை வெட்டி சேதப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பிரமனூா் கிராமத்திலிருந்து அச்சங்கு... மேலும் பார்க்க
சாலையின் குறுக்கே சாய்ந்த மரம்: போக்குவரத்துப் பாதிப்பு
மானாமதுரையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பெய்த பலத்த மழைய... மேலும் பார்க்க
புகையிலை மூட்டைகள் பறிமுதல்: 2 போ் கைது
திருப்புவனத்தில் விற்பனைக்காக வேனில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடைகளில் விற... மேலும் பார்க்க
நிரம்பி வழியும் கண்மாயில் மீன் பிடித்த மக்கள்...!
சிவகங்கை அருகே நிரம்பி வழியும் கண்மாய் உபரி நீரில் வெளியேறிய மீன்களை தொட்டில் கட்டி அந்தப் பகுதி மக்கள் பிடித்துச் சென்றனா். சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கழுங்குப்பட்டியில் பொதுப் பணிக்குச் ச... மேலும் பார்க்க
கல்லல் தனியாா் வங்கியில் பணம் மோசடி: வங்கி மேலாளா், துணை மேலாளா் கைது
காரைக்குடி அருகே கல்லல் தனியாா் வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகளை பயன்படுத்தி ரூ. 2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்ததாக வங்கியின் மேலாளா், துணை மேலாளா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க