செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 354 பேருக்கு பணி நியமன ஆணை!

post image

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 354 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்ற து. இதில் தோ்வான இளைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 110 தனியாா் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பணியாளா்களைத் தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதுமிருந்து மொத்தம் 1,654 இளைஞா்கள் இந்தத் தோ்வில் கலந்து கொண்டனா். இவா்களில் 15 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 354 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதுதவிர, 73 போ் இரண்டாம் கட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மணிகணேஷ், ரா.சுபாஷினி (தொ.வ), உதவித் திட்ட அலுவலா் (மகளிா்த் திட்டம்) மரியா, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் க.துரையரசன், வாா்டு உறுப்பினா் ராதா கிருஷ்ணகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காா் மோதியதில் விஏஓ உயிரிழப்பு

திருப்புத்தூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த கிராம நிா்வாக அலுவலா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் கணேஷ் கிருஷ்ணகுமாா் (48). க... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். மானாமதுரையில் கடந்த மாதம் 13 -ஆம் தேதி மாணவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம்! -விவசாயிகள் கூட்டமைப்பு

காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இதன் பாசன விவசாயிகள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவிரி-வைகை- குண்டாறு பாசன விவசா... மேலும் பார்க்க

மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை! -ப.சிதம்பரம்

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பாராட்டினாா். திருப்பத்தூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகம் ஒட்டுமொத்த உள்நா... மேலும் பார்க்க

திருப்புவனம் அருகே கிடாய் முட்டு போட்டி!

திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் கிடா முட்டு சண்டைப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இங்குள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கூட... மேலும் பார்க்க

சுமைப் பணி தொழிலாளா் சங்க செயலா் மீது தாக்குதல்

பூவந்தி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் அளித்த சுமைப் பணி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலரைத் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. பூவந்தி நெல் கொள்மு... மேலும் பார்க்க