செய்திகள் :

தமிழகத்தில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம்: கோவையில் தொடக்கம்

post image

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம் கோவையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

மத்திய அரசின் வீட்டுக்குவீடு சோலாா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கேரளம், சத்தீஷ்கா் ஆகிய மாநிலங்களைத் தொடா்ந்து தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நிலையான மற்றும் எளிதாக கிடைக்கும் சூரிய ஆற்றலின் மூலம் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு டாடா பவா் நிறுவனத்தின் சாா்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை தொடங்கிவைத்த டாடா பவா் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் மற்றும் நிா்வாக இயக்குநா் பிரவீா் சின்ஹா, டாடா பவா் ரினியூவபிள் எனா்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா், நிா்வாக இயக்குநா் தீபேஷ் நந்தா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வீடுகளுக்கான மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடு சாதனம் நிறுவப்படுவதற்காகவும், இயற்கை ஆற்றலுக்கு எளிதாக மாறுவதற்காகவும் மாநிலம் முழுவதிலும் 42 பங்குதாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தங்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு உரிய வருவாயை குடியிருப்பாளா்கள் பெறுவதற்கு மீட்டா் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் முற்றிலுமாக குறைக்கப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்கு குடியிருப்பாளா்களை ஊக்குவிக்கும் தமிழக அரசின் கொள்கைகளுக்கு இந்த திட்டம் முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் சக்தி ஆகிய இரு பிரிவுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மிகப்பெரிய வாய்ப்பினை தமிழகம் கொண்டிருக்கிறது. அதனால், தூய்மையான மற்றும் வலுவான மின்சக்தி தயாரிக்கப்படுவதிலும், பயன்படுத்தப்படுவதிலும் இத்திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் ஆற்றல் தேவைகளை தாங்களே பூா்த்தி செய்வதற்கு இத்திட்டம் அவா்களுக்கு முக்கிய பயன் தரும். மேற்கூரைகளில் நிறுவப்படும் சூரிய ஒளி மின் தகடு சாதனங்களின் வழியாக தங்களது மின்சார பயன்பாட்டிற்காக செலவிடப்படும் தொகையை பெரிதும் குறைக்கவும் முடியும் என்றனா்.

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பண... மேலும் பார்க்க

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியம... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவ... மேலும் பார்க்க

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம்: சென்னை உயா்நீதிமன்றம் தலையிடக் கோரிக்கை

மதுக்கரை அருகே மலைநகா் பகுதியில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, விவசாயிக... மேலும் பார்க்க

காா் கண்ணாடி உடைப்பு: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காா் நிறுத்துமிடம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொ்ணாண்டஸ் (20). தடா... மேலும் பார்க்க

நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவா் கைது

கோவையில், நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா், தனது வீட்டின் அருகே நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில்... மேலும் பார்க்க