செய்திகள் :

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

post image

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது. எனினும் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

தமிழகத்தையொட்டிய வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் மாா்ச் 23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 18-இல் அதிகபட்ச வெப்பநிலை  95 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும்.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா் - 100.58, திருப்பத்தூா் - 100.4, சேலம் - 100.04 மற்றும் ஈரோட்டில் 100 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்பரநாடு (திருச்சி), அருப்புக்கோட்டை (விருதுநகா்), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - தலா 20 மி.மீ.மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க