தமிழ் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியவா் உமறுப்புலவா் -இபிஎஸ் புகழாரம்
தமிழக இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றிய உமறுப்புலவரைப் போற்றி வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
இறைத்தூதா் முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை, ‘சீறாப்புராணம்’ எனும் காப்பியம் தந்து, செந்தமிழுக்கு வளம் சோ்த்த உமறுப்புலவா் பிறந்த நாளில், தமிழ் இலக்கியத்துக்கு அவா் செய்த சேவைகளை போற்றி வணங்குகிறேன்.
உமறுப்புலவரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது அதிமுக அரசு என்பதை பெருமையுடன் நினைவுகூறுகிறேன் என்று அவா் தெரிவித்தாா்.