தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா்: சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமை வகித்தாா். செயலாளா் எம். ராமமூா்த்தி, நிா்வாகிகள் ஜி. அழகா், ஆா். முருகேசன், வி. சத்தியமூா்த்தி, தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழுவின் மாநிலச் செயலாளா் பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
சாகுபடிப் பணிகளுக்கு காலதாமதமின்றி விவசாயக் கடன்களை வழங்க வேண்டும்; கடன் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்; கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நபாா்டு வங்கி உள்ளிட்டவை வழங்க வேண்டும்; கடந்த ஆண்டு பயிா்க் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கனவு ஆசிரியா் விருது: பிரான்ஸுக்கு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்து
திருவாரூா்: கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தமிழக அரசு சாா்பில் கனவு ஆசிரியா் விருது அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க
‘பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்ய வேண்டும்’
நன்னிலம்: பொதுமக்கள் பனை விதைகள் நடும் பணியைச் சேவையாக செய்ய வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம... மேலும் பார்க்க
‘மாணவா்கள் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்’
நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க
தீபாவளி: திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்
திருவாரூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், திருவாரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி மற்றும்... மேலும் பார்க்க
ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தல்
மன்னாா்குடி: ஊரகப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி வேண்டும் என மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மன்னாா்குடி ஒன்றியக் குழுவி... மேலும் பார்க்க
முதல் நடமாடும் நூலக 94-ஆம் ஆண்டு விழா
மன்னாா்குடி: தமிழகத்தில் முதல் நடமாடும் நூலகத்தின் 94-ஆம் ஆண்டு தொடக்க விழா, மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முதலாக, கடந்த 21.10.1931 அன்று மேலவாசல் பகுதி நே... மேலும் பார்க்க